Oct 16, 2014

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அறபு நூலக திறப்பு வைபவமும்.

கடந்த 06.10.2014 திங்கட் கிழமை அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அதி சங்கைக்கும் மரியாதைக்கும் உரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து பயன் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களாலும் ஏனைய "உலமாஉ"களாலும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  அறபு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.