மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் -
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன்
தொடர்புடைய அனைத்திலும் பறகத் – அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின்
ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ்
– தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களுடன் தொடர்புடைய அனைத்தைக் கொண்டும் பறகத் – அருள் பெற்றார்கள்.
நோய் நிவாரணம் பெற்றார்கள். அண்ணலின் தோழர்கள்
பாக்கியம் பெற்றவர்கள்.