Sep 12, 2015

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்

குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், ஸெய்யிதுஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக கடந்த 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் மௌலித் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. 
இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்