சங்கைக்குரிய ஷெய்குனா
அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப்
மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்
நோன்பு என்றால் என்ன?
அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது ஒரு பொது விதி இந்தப் பொது விதி நோன்பு என்ற வணக்கத்துக்கு மட்டுமென்று நினைத்துக் கொள்ளாதே!
ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! நீ எந்த அமலை செய்வதானாலும் அந்த அமலைப் பற்றியும் அதைச் செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! நீ எந்த அமலை செய்வதானாலும் அந்த அமலைப் பற்றியும் அதைச் செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
ஓர் அமலின் (வேலையின்) நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் அவ் வேலையிலீடுபடுவது அறிவுடமையாகுமா? நீ நன்றாக சிந்தித்துப் பார்! நீ நோன்பு நோற்றாலும் வேறெந்த வணக்கத்தைச் செய்தாலும் அவ் வணக்கத்தின் நோக்கத்தை அறிந்து செயல்படு!