Mar 26, 2012

100வது மாணவர் மன்றம்

அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்ற சிறப்பு நிகழ்வுகள்

காத்தான்குடி – 05 B.J.M அமைந்துள்ள றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 100வது மாணவர் மன்ற நிகழ்வுகள் 24-03–2012 சனிக்கிழமை றப்பானிய்யஹ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா- அல் ஆலிமுல் பாழில் அஸ்-ஸெய்யித் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அதாலல்லாகஹு பகாஅகஹூ) அன்னவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

Mar 18, 2012

அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்

- மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)-

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ்.

அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்!

Mar 14, 2012

நபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..

-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த குழந்தை கீழே நழுவி விழ அதனை ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றது. இவர்கள் உயிர் தப்பி அக்கரை வந்து சேர்ந்தார்கள்.

Mar 9, 2012

குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 27வது வருட மாகந்தூரி


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணை நிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கந்தூரி நிகழ்வுகள் இம்முறையும் 02.03.2012 ஆரம்பமாகி 04.03.2012 அன்று கந்தூரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்... 

(இந்நிழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்டது.)
3 தினங்கள் நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் .... 

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்கள்



பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.

மௌலவீ  MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் 
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, 
விரிவுரையாளர் - றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். 


றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். 

இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும். 

Mar 2, 2012

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 22வது வருட மகா கந்தூரி ....


கொடி யோற்ற ஆரம்பம் -- 22.03.2013 பி.ப 5.00 மணி
கந்தூரி நிகழ்வு -- 24.03.2013 இரவு 9.00 மணி

நிகழ்வுகள்
1ம் நாள் -- 22.03.2013 வௌ்ளிக் கிழமை
பி.ப 5.00 மணி -- திருக்கொடியேற்றம்
மஃரிப் தொழுகையின் பின் -- மௌலித் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

2ம் நாள் -- 23.03.2013 சனிக்கிழமை
பி.ப 5.00 மணி -- மௌலித் மஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- தலைபாத்திஹா மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

3ம் நாள் -- 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை
பி.ப 5.00 மணி -- மௌலித் மஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை, தபர்றுக் விநியோகம்.

கந்தூரி நடவடிக்கைக்கான அலுவலகம் திறத்தல் -
17.03.2013 ஞாயிற்றுக்கிழமை புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வின் பின்

இந்நிகழ்வுகளில் தாங்கள் அனைவரும் கலந்து காணிக்கை நேர்ச்சைகளை வழங்கி வைத்தியக் கலாநிதி ஷெய்தாவூத் (வலீ) அவர்களின் அருளைக் பெற்றுக் கொள்ளுமாறு பணிவாய் வேண்டுகின்றோம்.

நிகழ்வுகள் யாவும் எமது சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக்குரல் www.shumsme.comல் நேரடியாக LIVE செய்யப்படும்

நிர்வாகம் - BJM