Dec 29, 2013
Dec 28, 2013
நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?
1:30 AM
சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
நபீ (ஸல்) அவர்கள் மனிதனா? “மலக்” எனப்படும் அமரரா? அல்லது ஜின்னா?
இப்படியான கேள்விகள் இன்று நேற்று எழுந்த கேள்விகளில்லை.
நபீ ஸல் அவர்களின் காலத்திலேயே இப்படியான கேள்விகள் அன்று வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களைத் துளைத்துக் கொண்டிருந்தன. இதனால்தான்....
قل إنــّمـا أنـا بشـر مـثـلـكم
“குல் இன்னமா அன பஷறுன் மித்லுகும்” (18 : 110)
‘முஹம்மதே ! நான் உங்கள் போன்ற மனிதனென்று (அந்த மக்களிடம்) சொல்லுங்கள்’ என்ற திருமறை வசனம் இறங்கிற்று.
நபீ ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் நெஞ்சங்களை மேற்கூறிய வினாக்கள் துளைக்வில்லையாயின், நான் உங்கள் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் – மனிதனென்பது அந்த மக்களனைவருக்கும் தெரிந்த விஷயமாகத்தானிருந்தது.