மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
2014 செப்டம்பர் 4ம் திகதி வெளிவந்த
தினகரனின் 5ஆம் பக்கத்தில் “முஹம்மது நபியின்
அடக்கஸ்தலத்தை இடமாற்ற சர்ச்சைக்குரிய ஆலோசனை” என்ற கட்டுரையை
படித்தபோது அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன், கியாமத்
நாள்தோன்றி விட்டதோ என்ற ஐயம்
எனக்கு ஏற்பட்டது.
மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாயலின் அருகே அதைச் சேர்ந்தாற்போல் நபிகள் திலகம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது அவர்களும் அவர்களின் மனைவி ஆயிஷஹ் அன்னையும் வாழ்ந்த இடமாகும்.
நபிகள் (ஸல்) அவர்கள் இவ் உலகை
விட்டும் பிரிந்தபோது அவர்களை எங்கே அடக்கம்செய்வது என்று சஹாபாக்களும்
குடும்பத்தினரும் ஆலோசனை செய்தனர்.
சிலர் ஜன்னதுல் பகீயில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் இப்றாஹீம் நபீ
அடக்கப்பட்ட இடத்தில் அடக்கப்படவேண்டுமென்றும்
கருத்துக்களை பகிர்ந்தனர். ஆனால் அபூபக்ர் சித்தீக்
(றழி) அவர்கள் ‘எந்த