மெளலவீ MMA. மஜீத் றப்பானீ
தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை
அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான்.
நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான்.
எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள் அனைவரும் இவ்வுலகில் செய்த பணி ஆன்மீகப் பணியேயாகும். இப்பணிக்கு நிகரான பணி எதுவுமே கிடையாது.