Oct 28, 2011

காதிரிய்யஹ் திருச்சபை

மெளலவீ MMA. மஜீத் றப்பானீ
தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை

அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான்.

நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான். 

எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள் அனைவரும் இவ்வுலகில் செய்த பணி ஆன்மீகப் பணியேயாகும். இப்பணிக்கு நிகரான பணி எதுவுமே கிடையாது. 

Oct 27, 2011

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ

எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். 

அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். 

பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று நவின்றார்கள். 

இந்த நபீ மொழியில் இருந்து “ லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ” என்று நம்பி, மொழிந்து வழி நடந்தவர்களான நபீகள் நாதரின் “ உம்மத் ” சமூகத்தவர்தான் 72 கூட்டமாக பிரிவார்கள் என்றும், அவர்களில் ஒரு கூட்டம்தான் சொர்க்கம் நுழையும் என்றும், ஏனைய எழுபத்தொரு கூட்டத்தவரும் நரகில் நுழைவார்கள் என்றும் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டம் நபீகளின் – அவர்களின் தோழர்களின், குடும்பத்தவரின் வழி நடந்தவர்கள் என்றும் தெளிவாகிறது.

கொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்

ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும்

எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது கறாமத் என்னும் அற்புதம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் சமுத்திரம் இங்கு வந்து கூடுவதற்கு காரணமாக அமைகின்றது. 

ஸியாரத் தோன்றிய வரலாறு.