Apr 9, 2013

தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 06 ...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ 
அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் 

திரை நீக்கம் 

“தல்கீன்” ஓதுவது கூடாதென்போர் மரணித்தவர்கள் மண்ணுடன் மண்ணாகிவிட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்கமாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாராமாக முன்வைக்கின்றார்கள். 

وماآنت بمسمع من فى القبور 

நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர். 

(திருக்குர்ஆன் – 35 – 22) 

Apr 7, 2013

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 05 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 

நபிய்யுல்லாஹ் அல்லது வலிய்யுல்லாஹ் என்பவர்கள் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களேயாவர். இவர்களை நினைக்கும்போது அல்லாஹ்வின் நினைவுவருமேயன்றி ஷெய்தான், இப்லீஸ், பிர்அவ்ன், தஜ்ஜால், அபூஜஹ்ல், போன்றோரின் நினைவு ஒருபோதும் ஒருவருக்கும் வரமாட்டாது. நபீமார், வலீமார் ஆகியோரைப் புகழ்வதும் அவர்களின் வாழ்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், அவர்கள் பெயரால் அன்னதானம் வழங்குவதும், பொதுவாக மௌலித் ஓதுவதும் அவர்களை கண்ணியப்படுத்துவதாகவே அமையும்.

Apr 2, 2013

ஆன்மீக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

(தொடர் - 04) 
சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ 
(அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்) 

ஸபரும் றபீஉனில் அவ்வலும் : 

அதிசங்கைக்குரிய உஸ்தாத் அப்துல் ஜவாத் நாயகம் அவர்கள் ஸபர், றபீஉனில் அவ்வல் மாதங்களில் மாநபீ முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பாடும் இரு மஜ்லிஸ்களை ஏற்படுத்தினார்கள். புனித ”ஸபர்” தலைப் பிறையிலிருந்து மாதம் முடியும் வரை நபீபுகழ் பாவலர்களான இமாம்சதகதுல்லாஹ் அல்காஹிரீ (றஹ்), இமாம் முஹம்மத்பின் அபூபக்ர்பக்தாதீ (றஹ்) ஆகியோரால் யாக்கப்பட்ட மாநபீபுகழ் காப்பியம் ”அல்வித்ரிய்யதுஷ் ஷரீபஹ்” பாமாலையை ஒரு இரவுக்கு ஒருஹர்புவீதம் மஃறிப் தொழுகையின்பின் ஓதிவந்தார்கள். 

36வது வருட புனித புஹாரி ஷரீப்












ஆரம்பம் - 07.05.2013
முடிவு - 05.06.2013