Dec 24, 2012

இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) 
(Justice of The Peace Whole Island)

“கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”  என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு என்றும், திருக்குர்ஆன் “தமாம் நிகழ்வு என்றும் சொல்லப்படுகிறது.

கத்ம் ஓதுதல் பித்அத்த அல்ல
இறந்தவர்களுக்கு கத்ம் ஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம் அல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த ஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத் என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.
"إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره
والطبراني (12/444 رقم 13613) والبيهقي في الشعب (7/16 رقم9294)

Dec 11, 2012

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 ...

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்- 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்! 

வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர். 

இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. 

சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான்.