Apr 29, 2016

இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்

அகிலத்தின் ஜோதி அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த அஸ்ஸெய்யித் இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.04.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மஜ்லிஸ் நிகழ்வுகளாக மஃரிப் தொழுகையின் பின் மௌலிது ஜஃபர் ஸாதிக் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களால் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று இறுதியாக துஆ பிரார்த்தனையுடன் தபர்றுக் விநியோகமும் நிறைவு பெற்று இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

Apr 28, 2016

இறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.

இனியோரே!

அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு

இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன்.

நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில துர்ப்பாக்கியவாதிகள் நம்பாமல் கேலிசெய்தாலும் அவர்களின் கேலியால் அவ்விடயம் பொய்யாகிவிடாது. அக்கேலி அப்போலிகளின் அறியாமையின் வெளிப்பாடாகும்.

Apr 25, 2016

30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு

கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக எதிர்வரும் 25.05.2016 தொடக்கம் 29.05.2016ம் திகதிகளில் காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 30 வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைக்களுக்கான ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம் 24.04.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று புனித புகாரீ ஷரீப் மஜ்லிஸ் நிறைவின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியி்ன் மாணவர்களும், ஹாஜாஜீ பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- அல்ஹம்துலில்லாஹ் -

Apr 24, 2016

ஸூபியாக்களை எதிர்ப்பவர்களின் நிலை

يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ  وازدادُوا علما إلى علمهم،

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

(வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும். எதிர்க்கும் அந்த வீணர்கள் பொறாமையைத் தூக்கி எறிந்து விட்டு “அஹ்லுல்லாஹ்” அல்லாஹ் உடையவர்கள் என்றழைக்கப்படும் ஸூபிகளின் வழியில் நடப்பார்களானால் பொறாமை, எதிர்ப்பு என்பன அவர்களால் உருவாக மாட்டாது. அதோடு தமது அறிவோடு மேலதிக அறிவையும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.)

Apr 15, 2016

விஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும்

அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் 14.04.2016 வியாழக்கிழமை காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லஸும் நடைபெற்று இறுதியா சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் பெரிய துஆ ஓதப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

- அல்ஹம்துலில்லாஹ் -

Apr 9, 2016

ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.

ஆக்கம் - மௌலவி MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தி 
றப்பானி, மிஸ்பாஹீ
இனியோரே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

மஃரிபத் என்ற இறைஞானத்திற்கு முரணானவர்களான கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக கற்பனை செய்து சித்தரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்று என்னவெனில் :- மஃரிபத் எனப்படுகின்ற இறைஞான வழியைப் பின்பற்றுவோர் ஷரீஅத் என்கின்ற வணக்க வழிபாடு அம்சங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் இது போன்ற கிரியைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் அவர்கள் பின்பற்றும் அவர்களின் இறைஞான அறிஞர்களும் அவ்வாறே இருந்துள்ளார்கள் என்பதாகும்.

இப்படிக் கூறுவது இவர்களின் மாபெரும் அறியாமையாகும். இவர்கள் இப்படிக் கூறுவதற்கு இவர்களிடத்திலே எவ்வித ஆதாரங்களுமே கிடையாது. எல்லாம் வெறும் கற்பனை செய்திகள் என்பதே வெளிச்சமான உண்மையாகும்.

Apr 6, 2016

39வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்.

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழிகள் அடங்கிய “ஸஹீஹுல் புகாரீ” ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 செவ்வாய்க்கிழமை அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

தொடர்ந்து 30 தினங்களுக்கு அஸர் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகி மஃரிப் தொழுகைக்காக இடை நிறுத்தப்பட்டு மஃரிப் தொழுகையின் பின் மீண்டும் ஆரம்பமாகி இஷா தொழுகைக்கான அதான் வரை மஜ்லிஸ் நிகழ்வுகள் நடைபெறும். இஷா தொழுகையின் பின் அன்று வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்களை சங்கைக்குரிய உலமாஉகளால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இரவு 09.00 மணியுடன் நிகழ்வுகள் யாவும் ஸலவாதுடன் நிறைவு பெறும்.

இப்புனிதமிகு மஜ்லிஸ் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற வருமாறு அன்பாய் அழைக்கிறோம்.

நன்றி