Dec 29, 2013

Dec 28, 2013

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்


நபீ (ஸல்) அவர்கள் மனிதனா? “மலக்” எனப்படும் அமரரா? அல்லது ஜின்னா?
இப்படியான கேள்விகள் இன்று நேற்று எழுந்த கேள்விகளில்லை.

நபீ ஸல் அவர்களின் காலத்திலேயே இப்படியான கேள்விகள் அன்று வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களைத் துளைத்துக் கொண்டிருந்தன. இதனால்தான்.... 
قل إنــّمـا أنـا بشـر مـثـلـكم 
“குல் இன்னமா அன பஷறுன் மித்லுகும்”        (18 : 110) 
‘முஹம்மதே ! நான் உங்கள் போன்ற மனிதனென்று (அந்த மக்களிடம்) சொல்லுங்கள்’ என்ற திருமறை வசனம் இறங்கிற்று. 

நபீ ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் நெஞ்சங்களை மேற்கூறிய வினாக்கள் துளைக்வில்லையாயின், நான் உங்கள் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் – மனிதனென்பது அந்த மக்களனைவருக்கும் தெரிந்த விஷயமாகத்தானிருந்தது.

Dec 27, 2013

நபீ புகழ் ஹாழிறூ பாச்சரம்

Dec 15, 2013

றஷீதிய்யஹ் கானங்கள்

القصائد الرشيدية

 

Dec 14, 2013

(القصائد المصباحية فى مدح الحضرة الرشيدية)

அலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்


 

Nov 19, 2013

Oct 22, 2013

பெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.

மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள்

நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தா பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள்.

பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள்.

நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள்.

நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகுதிருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள்.

நபீயவர்கள்ஆழ்ந்தசிந்தனையின்போதுகுச்சியால்நிலத்தைசிலநேரங்களில்கீறுவார்கள்.

Sep 20, 2013

பாங்கு சொல்லுமுன் சலவாத் சொல்வது பற்றி ஒர் ஆய்வு

சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ  A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள்

எல்லாப்புகழும் ஏகன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்,ஸலாம் இரண்டும் வழி கேட்டைஅழித்து நல்வழியை காட்டினவர்களான நபீ(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் அவ்லியாஉகள், நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.!

ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் செல்லும் வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது.

ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின் முதலில் அஸ்தஃபிருல்லாஹல் அளீம் என்று மூன்று தரமும்.

Aug 25, 2013

சகாத் பற்றி ஓர் ஆய்வு

தொடர் - 02...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

விபரம்

1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.

2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.

3. உடை​மைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.

Jul 19, 2013

நோன்பின் இரகசியங்கள்.

தொடர் – 03
அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழிஅவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ

விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.


நோன்பு என்பது 3 படித்தரங்களை உடைய ஒன்றாகும்.
  1. பொதுவானவர்களின் நோன்பு
  2.  விஷேடமானவர்களின் நோன்பு
  3. அதி விஷேடமானவர்களின் நோன்பு

பொதுவானவர்களின் நோன்பு என்பது வயிற்றையும், மர்மஸ்தானத்தையும் தடுத்திருத்தல். விஷேடமானவர்களின் நோன்பு என்பது கேள்வி, பார்வை, நாக்கு, கை, கால் ஏனைய றுப்புக்களை பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்ளல்.
அதி விஷேடமானவர்களின் நோன்பு என்பது மோசமான எண்ணங்களை விட்டும், உலக சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை

Jul 10, 2013

நோன்பு

மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும். 

நோன்பின் பர்ழுகள்: 

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும். 

நிய்யத்: 

'நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா - இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளானநோன்பை அதாவாக நாளைபிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத்செய்து கொள்ளவேண்டும். 

Jun 28, 2013

நோன்பின் மாண்பு

தொடர்- 01...
புதிய தொடர் ஆரம்பம்

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்

நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.

Jun 10, 2013

27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அறிவித்தல் - 2013

கரீப் நவாஸ் பௌன்டேஸன் நடாத்தும்

27வது வருட உர்ஸே முபாறக் - ஹாஜாஜீ மாகந்தூரியும்
13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும்

திருக்கொடியேற்றம் - 26.06.2013 புதன்கிழமை மாலை 5.00 மணி
மாகந்தூரி - 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி
இடம் - காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் 

Jun 5, 2013

36வது வருட புனித புஹாரீ ஷரீப் நிறைவு தின நிகழ்வுகள்...

கடந்த 07.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட புனித புஹாரீ ஷரீப் 30 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 05.06.2013 புதன்கிழமை நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

Jun 3, 2013

- 26.06.1960 - விஷேட நிகழ்வு

 சங்கைக்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களால் 26.06.1960ம் ஆண்டு காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் பள்ளிவாயலும் அதன் சுற்றுமதிலும் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு  இப்பழைய பள்ளவாயல் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் அவ்விடத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகிறது.

இந்தவகையில் 06.06.2013 அன்று இதில் இறுதியாக இருந்த முன்பக்க பள்ளிவாயல் சுவரும் உடைக்கப்பட்டது. இது 53 வருட பழமையானதாகும்.

Jun 2, 2013

பெருமானார் (ஸல்) அவர்களின் ஆடை

ஆக்கம் –
அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மௌலவீ
மாணவர் MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ

1. பெருமானார் (ஸல்) அவர்கள் மற்ற ஆடைகளை விட ”கமீஸ்” எனப்படும் கால் வரையுள்ள நீண்ட ஜுப்பாவை மிக விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆனால் ”கமீஸ்” என்பது எந்த ஆடை என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

2. பெருமானார் (ஸல்) அவர்களின் சட்டைக் கைகள் மணிக்கட்டு வரை இருக்கும். 
சட்டக்கைகள்மிக இறுக்கமாகவோ விசாலமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.

3. பெருமானார் (ஸல்) அவர்கள் பயணங்களில் அணியும் ஆடைகள் உயரம் சற்று குறைவாகவும், கைகள் சற்று சிறியதாகவும் இருக்கும். 

May 17, 2013

ஹுஜ்ர் இப்னு அதிய் (றழி)



வரலாறு மிகவிரைவில்...

May 3, 2013

ஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர்றஊப் மிஸ்பாஹீ - வரலாறு காணாத வரலாறு


தொடர் 08... 
எழுதுபவர் - 
கவித்திலகம்,
மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ

நபிகளின் திருக்காட்சி 

“அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா ” மதீனஹ் வளாகத்தின் இமாறதுஸ்ஸுபைஃ மாணவர் விடுதியில் துயின்ற பேரறிஞர் மிஸ்பாஹீ நாயகம் திடீரென்று எழுந்து மச்சான் ஹஸ்புல்லாஹ் எழும்பு என்று நித்திரையிலிருந்த தமது நண்பனை அழைத்தார்கள். நண்பனின் அழைப்பைக் கேட்டு தீடீரென விழித்த நண்பன் ஹஸ்புல்லாஹ் என்ன மச்சான் றஊப்… என்று கேட்டவராகவே அருகில் வந்தார். அவரை அருகில் அமர்த்திய அறிஞர் அவருக்கு தான் கண்ட அருள் நிறைந்த அந்த அற்புதக் கனவை விளக்கினார்கள்.

May 2, 2013

Apr 9, 2013

தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 06 ...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ 
அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் 

திரை நீக்கம் 

“தல்கீன்” ஓதுவது கூடாதென்போர் மரணித்தவர்கள் மண்ணுடன் மண்ணாகிவிட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்கமாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாராமாக முன்வைக்கின்றார்கள். 

وماآنت بمسمع من فى القبور 

நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர். 

(திருக்குர்ஆன் – 35 – 22) 

Apr 7, 2013

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 05 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 

நபிய்யுல்லாஹ் அல்லது வலிய்யுல்லாஹ் என்பவர்கள் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களேயாவர். இவர்களை நினைக்கும்போது அல்லாஹ்வின் நினைவுவருமேயன்றி ஷெய்தான், இப்லீஸ், பிர்அவ்ன், தஜ்ஜால், அபூஜஹ்ல், போன்றோரின் நினைவு ஒருபோதும் ஒருவருக்கும் வரமாட்டாது. நபீமார், வலீமார் ஆகியோரைப் புகழ்வதும் அவர்களின் வாழ்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், அவர்கள் பெயரால் அன்னதானம் வழங்குவதும், பொதுவாக மௌலித் ஓதுவதும் அவர்களை கண்ணியப்படுத்துவதாகவே அமையும்.

Apr 2, 2013

ஆன்மீக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

(தொடர் - 04) 
சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ 
(அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்) 

ஸபரும் றபீஉனில் அவ்வலும் : 

அதிசங்கைக்குரிய உஸ்தாத் அப்துல் ஜவாத் நாயகம் அவர்கள் ஸபர், றபீஉனில் அவ்வல் மாதங்களில் மாநபீ முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பாடும் இரு மஜ்லிஸ்களை ஏற்படுத்தினார்கள். புனித ”ஸபர்” தலைப் பிறையிலிருந்து மாதம் முடியும் வரை நபீபுகழ் பாவலர்களான இமாம்சதகதுல்லாஹ் அல்காஹிரீ (றஹ்), இமாம் முஹம்மத்பின் அபூபக்ர்பக்தாதீ (றஹ்) ஆகியோரால் யாக்கப்பட்ட மாநபீபுகழ் காப்பியம் ”அல்வித்ரிய்யதுஷ் ஷரீபஹ்” பாமாலையை ஒரு இரவுக்கு ஒருஹர்புவீதம் மஃறிப் தொழுகையின்பின் ஓதிவந்தார்கள். 

36வது வருட புனித புஹாரி ஷரீப்












ஆரம்பம் - 07.05.2013
முடிவு - 05.06.2013

Mar 27, 2013

Mar 21, 2013

ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு

தொடர்- 09
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் 
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
முடிவுரை

இங்கு ஈஸால் தவாப் என்ற தலைப்பில் என்னால் முடிந்த வரை ஆதாரங்கள் திரட்டி மரணித்தவர்களுக்காக உயிரோடு செய்கின்ற நல்லமல்களின் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதை நிறுவியிருக்கின்றேன். இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் தவிர இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு எழுதி இத்தொடரை பெரிதாக்கவிரும்பவில்லை.

Mar 16, 2013

இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியம் ஏற்பாடு செய்த இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா நிகழ்வு 08.03.2013 அன்று கல்முனைக் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் எண்கோண மேடையில் பி.ப 06.30 மணியளவில் (மஃரிப் தொழுகையின் பின்) வெகு சிறப்பாக ஆரம்பமானது. 

இப்பெரு விழாவில் கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அன்னவர்களின் நினைவாகவும், பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புகழ் காப்பியம் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூல் வெளியீட்டு விழாவும், சுன்னத் வல் ஜமாஅத் பெரும் உலமாக்களால் மார்க்க உபன்னியாசமும் இடம்பெற்றது. 

Mar 9, 2013

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தின பிரசுரம்

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 09.03.2012 அன்று சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களினால் வெளி​யீடு செய்யப்பட்ட பிரசுரம் எமது இணையத்தள வாசகர்களுக்காக....  

Mar 8, 2013

நினைவு தின நிகழ்வு பற்றிய அறிவித்தல்

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தின நிகழ்வுகள் எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 09.03.2013 சனிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் பின்வரும் விபரப்படி நடைபெறும்.

மஃரிப் தொழுகையின் பின் - புனித கத்முல் குர்ஆன், தொடர்ந்து மௌலித் மஜ்லிஸ்

மஃரிப் தொழுகையின் பின் - பயான் நிகழ்வு , தபர்றுக் விநியோகம் 

இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் பேரருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் நேரடி ஔிபரப்புச் செய்யப்படும்.

Mar 2, 2013

கந்தூரி நிகழ்வுகள்


கன்ஜேஷவா குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்கள் பெயரிலான 65வது வருட கந்தூரி நிகழ்வுகள் 26.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித், பயான் நிகழ்வுகள் இடம்பெற்று 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை 9.00 மணிக்கு தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
 - அல்ஹம்துலில்லாஹ் -

Feb 23, 2013

குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி நிகழ்வுகள்...


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் இணைநிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கம் நடாத்தும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 23.02.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையின்பின் புனித முஹ்யித்தீன் மௌலித் ஓதப்பட்டது. இஷாத்தொழுகையின்பின் பயான்நிகழ்வு இடம்பெற்று தபர்றுக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 
அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்வுகள் உள்ளே...!

Feb 7, 2013

சிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும்,ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகளும்



காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ் தரீகஹ்களின் ஷெய்க் நாயகம் கலாநிதி ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகள் 05.20.2013 செவ்வாய் மாலை புதன் இரவு இஷாத் தொழுகையின்பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வகள் அனைத்தும் மிஸ்பாஹீ நாயகமர்களின் முரீதீன்களின் சபையான காதிரிய்யஹ் திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Jan 29, 2013

பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2013

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 25.01.2013 வௌ்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து சுப்ஹ் தொழுகை வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய இருநூற்கள் இம்மஜ்லிஸில் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக அலுவலகமும் அன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளே...

புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்

 அல்ஹாஜ் அப்துல் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், இப்றாஹீமிய்யஹ் குர்ஆன் மத்ரஸா, றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றில் புனித றபீஉனில் அவ்வல் மாத்தத்தினைச் சிறப்பிக்குமுகமாக பூமான் நபீ புகழ்கூறும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 12 தினங்கள் நடைபெற்று 24.01.2013 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்!
புகைப்படங்கள் உள்ளே...

Jan 26, 2013

மனித உயிர்களைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு - 2013


கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.

Jan 25, 2013

கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.


முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் - ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். 

Jan 4, 2013

வாழ்த்துகிறோம்....



மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஸம்ஸ் மீடியா யுனிட்
ஸம் இணைத்தளம்

Jan 2, 2013

அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் - இலவச பாட நூல் விநியோகம் 2012

இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். 

திகதி – 26.12.2012 

வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். 

பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம்.