May 31, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(​Hons)

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை பெற்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர்சூட்டுமாறு தம்தந்தை இமாம் ஜைனுல்ஆபிதீன் அவர்களை வேண்டினார்கள் இமாம் முஹம்மது பாகர் அவர்கள். அக்குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத்திருப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்றபெயரும் ஒருங்கிணைந்து உலகம்முழுவதும் பெயர்பெற்றது.

May 22, 2012

அல்-குர்ஆனின் நற்போதனைகள்

அபூ ஸுப்தீ
நல்லுபதேசம் செய்யுங்கள்
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55)


உண்மை பேசுங்கள்

அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119)

அழகானதைப் பேசுங்கள்
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83)

May 20, 2012

35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழு​​கையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

May 16, 2012

கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின்
64வது வருட மா கந்தூரி


காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.
3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை ஒதிமுடித்த 9 மாணவ மாணவிகக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

May 14, 2012

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஸலாத்துல்முஸாபிர்
(கஸ்ரு, ஜம்உ தொழுகை)
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர்.

'ளுஹர்- அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன.

May 6, 2012

ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click)
என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை
- ஏறும் கொடியும் ஈமான் பலமும் -

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?
கவித்திலகம்
இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ.....?
அதனாற்றான் –
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.