Oct 24, 2012

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. 
HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். 

அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. 

Oct 12, 2012

வஸீலாத் தேடலாமா? --

(தொடர் 08......)

உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.