Nov 25, 2011

ஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் (றழீ) அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.

மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ 

அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ (றழீ) அவர்களின் கொலை பற்றிக் குறிப்பிடுகையில் 

நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

மௌலவீ K.R.M. ஸஹ்லான் றப்பானி BBA (Hons) 
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான்.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (திருக்குர்ஆன் 15:26)

Nov 16, 2011

மஹான் பல்லாக்கு வலிய்யுல்லாஹ்

Moulavee: AAM .AROOS RABBANI 

ஹிஜ்ரி 1338 ம் ஆண்டு தொண்டியை நோக்கி பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார் பொருமகனார் ஒருவர். அங்கே அடங்கியிருக்கும் தமது பாட்டனாரை தரிசிப்பதற்காக அவர் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வழியிலேயே அவர்களை வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பல்லக்கு வரும் திசையை நோக்கிச் சென்று அதைச் சுமக்கவும் செய்கின்றார்கள்.