ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.
1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும்.
ஜனாஸா தொழுகையின் பர்ழுகள்
1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை, கிப்லாவைநோக்கி, அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.