Oct 18, 2014

சுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு

சுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு தற்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்வினை சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் K. முஹம்மது வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ (தெவடகஹ ஜும்அஹ் மஸ்ஜிதின் பிரதம இமாம்) அவர்கள் அழகிய கஸீதா ஒன்றினை இசைத்து துவக்கம் செய்து வைத்தார்கள்.

தற்பொழுது மாநாட்டு மேடையில் மௌலவீ MR. முஹம்மது சில்மீ (நூரீ) [BA. Hon. PGDE. M.A. சிரேஷ்ட விரிவுரையாளர் -தர்ஹா நாகர் தேசிய கல்வியியற் கல்லூரி- முகாமையாளர் - அளுத்கம ஆசிரியர் மத்திய நிலையம்- தர்ஹா நகர். ] அவர்களால் "நான்கு மத்ஹபைப் பின்பற்றுதல்" என்னும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது.