Feb 11, 2014

இரத்த தான நிகழ்வு 2014


அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து இரத்த தானம் செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினர்.