Feb 19, 2014

மீண்டும் ஆரம்பமானது ஜும்அஹ் தொழுகை


சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் – ஜும்அஹ் தொழுகை  14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் குத்பஹ் பிரசங்கம் நிகழ்த்த சங்கைக்குரிய மௌலவீ. ALM. இஸ்மாயீல் (பலாஹீ) அவர்கள் தொழுகை நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப் பேருரை நிகழ்த்தினார்கள்.