Aug 13, 2015

நபீகளார் தேடிய வஸீலா

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:... قَالَ: «اللهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، اغْفِرْ لِأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ، ولَقِّنْهَا حُجَّتَها، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا، بِحَقِّ نَبِيِّكَ وَالْأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ»

(المعجم الكبير للطبراني 871، وأبونعيم فى الحليّة والحيثمي فى مجمع الزوائد 9\257)

அலீறழியல்லாஹு அன்ஹுஅவர்களின் தாயார்பாதிமா பின்தி அஸத்அவர்கள் மரணித்த போது நபீ பெருமான்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் (யா அல்லாஹ்! ன்னுடைய நபீயின் பொருட்டு கொண்டும், எனக்கு முன்னுள்ள நபீமார் பொருட்டு கொண்டும் எனது தாய்க்கு பின் எனது தாயாரானவரின் பாவத்தை நீ மன்னித்து விடுவாயாக) என்று பிராத்தனை செய்தார்கள்.

(ஆதாரம்அல் முஃஜமுல் கபீர் லித்தபறானி – 871)
(அபூ நூஐம் பில் ஹில்யா பாகம் – 03 பக்கம் – 121)
(ஹைதமீ பீ மஜ்மயிஸ் ஸவாயித் பாகம் – 09 பக்கம் – 257)


சுருக்கம்நபீ பெருமான்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அவர்களின் தாய்க்குப் பின் தாயாக இருந்த அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் பாதிமா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின், (யாஅல்லாஹ்! என்னுடைய பொருட்டு கொண்டும், எனக்கு முன்னுள்ள நபீமார் பொருட்டு கொண்டும் என்தாய்க்குப் பின் தாயான பாதிமாவின் குற்றத்தை மன்னித்தருள்வாயாக) என்றுவஸீலாதேடி பிரார்த்தனை செய்தார்கள்.

இவ்வாறுதுஆகேட்பதுவஹ்ஹாபிகளுக்குபிடிக்காதாகையில் இந்தஹதீதை” – நபீ மொழியை  - “ழயீப்பலமற்றதென்று சொல்வதற்கு ஆதாரம் தேடி வலை வீசுவார்கள். அவர்களின் வலையில் ஒரு சில செத்து நாறிப்போன மீன்கள் கிடைத்தாலும் கூடவஸீலாவை சரி என்று நிறுவுவதற்கு இந்தஹதீதுமட்டும் ஆதாரமல்ல என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நபீ மொழிழயீப்பலம் குறைந்ததென்று வைத்துக் கொண்டாலும் கூட இத்தகைய நபீ மொழி கொண்டுஅமல்செய்யலாம்செயல்படலாம்என்று நம்பத்தகுந்த பல அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். அவர்களில் இமாம் நவவீறஹிமஹுல்லாஹ்அவர்களும் ஒருவர்.

இதுவே திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் வடித்து எடுக்கப்பட்ட சாரம்.


வஹ்ஹாபிகள் தமக்குப் பிடிக்காததமதுஅக்ல்ஏற்றுக் கொள்ளாதநபீ மொழிகளைழயீப்என்று கூறி வருகின்ற வேகம் இன்னும் சில வருடங்களில் அதிவேகமாகி எந்த ஒருஹதீதுநூல்களிலும்ஸஹீஹ்பலம் வாய்ந்த ஹதீது ஒன்றுமில்லை என்று சொல்லி விடுவார்கள் போல் தோன்றுகின்றது.