Jan 17, 2015

உறக்கம் “வுழூ”வை முறிக்குமா?

வுழூஎன்றால் ஒருவன்ஷரீஆவில் கூறப்பட்ட முறைப்படி விதிப்படி - தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும்.

உதாரணமாக முதலில்வுழூவின்பா்ழைஇறுக்குகின்றேன் என்று நிய்யத்வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால்மஸ்ஹ்தடவுதல். இரு கால்களையும் கரண்டை உட்பட கழுவுதல். சொன்ன முறைப்படி செய்தல்.

இவ்வாறு செய்தால்வுழூஎன்ற சுத்தம் உண்டாகி விடும். இது தொடா்பான மேலதிக விபரம் தேவையானோர்ஷாபிஈ மத்ஹப்சட்டம் தெரிந்தசுன்னத் வல் ஜமாஅத்கொள்கை வழிசெல்லக் கூடிய ஒருவரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். “வுழூசெய்யாமலும் இருந்தாலும் இதற்கான சட்டத்தைமத்ஹப்வழி நடக்காத வஹ்ஹாபிகளிடம் கேட்டறியக்கூடாது. அவா்கள் அந்தகா்கள். அந்தகன் வழி காட்ட லாயிக்கற்றவன்.

தொழுவதற்கும், திருக்குர்ஆனை தொடுவதற்கும் இச்சுத்தம் அவசியமானதாகும். இதற்கு மாறாகச் சொல்வோர் - “வுழூஇன்றி அல்குர்ஆனை தொடலாம் என்போர் - நபி வழி தெரியாத  விழி கண் குருடா்கள். இவா்கள் நல்வழி பெற வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் இவா்களின் கண் திறக்கும். இன்றேல் குருடா்களாகவே வாழ்ந்து குருடா்களாகவே செத்துப் போக நேரிடும்.

ஒருவன் உறங்கு முன்வுழூஎன்ற சுத்தம் செய்து கொள்வதுஸுன்னத்நபீ வழி ஆகும். இவ்வாறு செய்தவன் உறக்கத்திலிருந்து விழிக்கும் வரைவுழூஎன்ற வணக்கத்துடன் உறங்கினவனாக கருதப்படுவான். அதற்கான நன்மை கிடைக்கும். அந்த உறக்கத்தின் போது அவன் மரணித்தால்வுழூஉடன் மரணித்ததற்கான நன்மையை பெற்றுக் கொள்வான்.

வுழூஉடன் உறங்கும் ஒருவனின்வுழூவிழிக்கும் வரை வரை முறிந்து விடாது. எப்போது விழிக்கின்றானோ அப்போதுதான் அது முறியும். “வுழூஎன்பது உறக்கத்தை கொண்டு முறிந்து விடாது. உறக்கத்தைக் கொண்டு . “வுழூமுறிந்து விடு மென்றால் உறங்கு முன்வுழூஅர்த்தமற்ற செயலாகி விடும். அா்த்தமுள்ள இஸ்லாம் அா்த்தமற்ற செயல் கொண்டு எவரையும் பணிக்காது.

ஒருவன் உறக்கத்தில் இருக்கும் வரை அவனிடம் “அன்னிய்யதுன்” என்ற தன்னுணர்வோ, அனானிய்யத்என்ற கா்வ உணர்வோ இருக்காது. எப்போது உறக்கத்தில் இருந்து விடுபடுகின்றானோ, துயிலுலகில் இருந்துதுன்யாஎன்ற பொய்யுலகுக்கு வருகின்றானோ அப்போதே அவனிடம்அன்னிய்யத்என்ற தன்னுணா்வு வந்து விடும்.

ஒருவனிடம் தன்னுணா்வு இருப்பது பெரும்பாகும். அதாவது அப்துல்லாஹ் என்பவன் தன்னை அல்லாஹ்வுக்கு வேறான தனிவுஜூத்உள்ளவனாக உணா்வதுஸூபிகளிடம் பெரும்பாவமாகும்.

وَقُلْتُ وَمَا ذَنْبِيْ فَقَالَتْ مُجِيْبَةٌ       وُجُوْدُكَ ذَنْبٌ لَا يُقَاسُ بِهِ ذَنْبٌ

பாவமே செய்யாத பக்திமான் ஒருவன் நான்
என்ன பாவம் செய்தேன்? என்று தன்னைத் தானே கேட்டான்.
அதற்கு அவனின் மனச்சாட்சி நீ
ஒருவன் இருப்பதாக உணா்கின்றாயே அதுவே
பெரும் பாவம் என்று அது கூறியது.

ஓா் இறைஞானி
நான் என்றிருந்தேனே!
நாளும் கழிந்தேனே!
தானாயிருந்த தன்மை அறியேனே

என்று வேதனையுடன் புலம்பியழுகின்றார்.

ஒருவன் உறக்கத்தில் இருக்கும் வரை அவனிடம்நான்என்ற உணா்வு இல்லாமற் போவதால் அவனின்வுழூமுறிந்து விடாது. அவன் உறக்கத்திலிருந்து விடுபட்டவுடன் அவனிடம் அந்த உணா்வு வந்து விடுவதால் அவனின்வுழூமுறிந்து விடுகின்றது.

எவன் எப்போதுவுழூசெய்தாலும் அவனிடம்நான்என்ற உணா்வு இல்லாமலிருக்கும் வரை அவனின்வுழூமுறிந்து விடாது. இது ஸுபிஸ வழி செல்பவா்களுக்கான கருத்தாகும்.


ஒருவன்நான்என்ற உணா்வு தனக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்வது கடினமாயினும் அயராத பயிற்சி மூலம் அந்த இடத்தை அடைந்தவன்தான் மனிதன்.
 - ஷாஹே ஷரன்தீப் -