Jan 6, 2015

மீலாத்துன் நபீ (கொண்டாட்டம்) நிகழ்வுகள்

சற்குண சீலர், சாந்த வடிவர், ஸபீஉல் முத்னிபீன் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த தினத்தையும் பிறந்த நேரத்தையும் சங்கையும் செய்யும் முகமாக வருடா வருடம் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 04.01.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகி மிக விசேடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.






இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது.




அருள் நபீ முஹம்மதுன் முர்தழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவில்லா அன்பு கொண்ட காத்தான்குடி, அதனை அண்டிய பிரதேசங்கங்கள் இன்னும் வெளியூர்களிலும் இருந்து வருகை தந்த அண்ணலாரின் பக்தர்களின் ஸலவாத் முழக்கத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின.









இம் மஜ்லிஸில் 5000ற்கும் அதிகமாக முஹிப்பீன்கள் கலந்து கொண்டதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணம் வழங்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.