Nov 25, 2014

தீனுக்காக வாழ்ந்த மகான்


எங்கள் மௌலவீ பாறூக் காதிரீ
உங்கள் பிரிவு இன்றும் வாட்டுது
நெஞ்சில் நினைவு நிழலாய் நிறையுது
உங்கள் வாழ்வு உணர்வில் இருக்குது

                                                அல்லாஹ் அவனின் அடியான் நீங்கள்
                                                வள்ளல் நபீயின் வாரிசு நீங்கள்
                                                நல்லோர் வலீமார் நேசர் நீங்கள்
                                                நல்லாசி பெற்ற நன்மகன் நீங்கள்

சாந்தி மார்க்கத்தை சாந்தமாய் சொன்னீர்
சங்கை பெற்று சாதனை படைத்தீர்
சங்கை நபியை உயிராய்க் கொண்டீர்
சாந்திமிக்க ஸலவாத்து சொன்னீர்

                                                உள்ளமைக் கொள்கையை உரத்துச் சொன்னீர்
                                                வல்லோன் அறிவை வாய்மையாய் தந்தீர்
                                                நல்லோர் சரிதம் நயமாய் உரைத்தீர்
                                                எல்லா நிலையிலும் ஏகத்துவம் செய்தீர்

தீனுக்காக என்றும் வாழ்ந்தீர்
தீனோர் நெஞ்சில் இடம் பிடித்தீர்
தீனுக்காக தியாகங்கள் செய்து
தீனுக்காக ஷஹீதானீர்

கவிஞர் MACM. றபாய்தீன் JP