Feb 6, 2012

பூமான் நபீ புகழ் கூறும் புனித மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்....

உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆரம்பமான பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப் தொடர்ந்து 12 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 04.02.2012 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றது.
மேற்படி நிகழ்வுகள் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் உட்பட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பில் கூட்டிணைக்கப்பட்டுள்ள மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், அல்மத்ரஸர் றஹ்மானிய்யஹ், அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகிய தாபனங்களிலும் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.