Feb 12, 2012

மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2012


கண்மனி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக றப்பானிய்யஹ் இளைஞர் கழகமான மாபெரும் இரத்தனான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வானது 11/02/2012 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகம், றப்பானிய்யஹ் மகளிர் மன்றம், அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கம் என்பன இணை அனுசரனை வழங்கியது. இதில் சமூக நலன் கருதி சுமார் 100க்கு மேற்பட்டோர் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமுகமாக பல்வேறு பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.