Jul 14, 2015

“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.

ஒருவன் ஒரு தொழுகைக்காகநிய்யத்வைத்தான். ஆனால் அவன் தொழவில்லை. அவன் ஒரு தொழுகையை தொழுதான். அதற்காக அவன்நிய்யத்வைக்கவில்லை. அத் தொழுகை எது? அதற்கான விபரம் என்ன?
ஒருவன் வெள்ளிக்கிழமைஜும்ஆதொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்த நேரம்இமாம்” – தொழுகை நடத்தியவர்இரண்டாவதுறக்அத்தில்அத்தஹிய்யாத்இருப்பில் இருந்தார். தொழ வந்தவன்ஷாபிஈமத்ஹப் சட்டப்படிஉஸல்லீ பர்ழல் ஜும்ஆ” “ஜும்ஆவின் பர்ழை தொழுகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தியவருடன்அத்தஹிய்யாத்இருப்பில் சேர்ந்து அத்தஹிய்யாத்ஓதினான். “இமாம்தொழுகையை முடித்த பின்அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்என்றுஸலாம்சொன்ன பின்அவன் எழுந்து நான்குறக்அத்தொழ வேண்டுமேயன்றி இரண்டுறக்அத்தொழக் கூடாது என்ற ஷாபிஈ மத்ஹபின் சட்டப்படி அவன் நான்குறக்அத்தொழுது முடித்தான்.


இவன்நிய்யத்வைத்ததுஜும்ஆதொழுகைக்காகத்தான். எனினும் அவன் தொழுதநான்கு றக்அத்ளுஹ்ர் தொழுகையேயாகும்.

ஜும்ஆதொழுகைக்காகநிய்யத்வைத்தான்ஜும்ஆதொழவில்லை. “ளுஹ்ர்தொழுதான் அதற்காகநிய்யத்வைக்கவில்லை.

நான்குஅத்தஹிய்யாத்இருப்புக்கள் யாருக்கு எந்த தொழுகையில் இடம் பெறலாம்?

நான்குறக்அத்துகள் உள்ள தொழுகை மூன்று. அவை ளுஹ்ர், அஸ்ர், இஷாஉ. இவை ஒவ்வொன்றிலும் இரண்டுஅத்தஹிய்யாத்இருப்புக்கள் உள்ளன. மூன்றுறக்அத்துகள் உள்ள தொழுகை ஒன்று மட்டும்தான். அதுமக்ரிப்தொழுகை. இதில் இரண்டுஅத்தஹிய்யாத்இருப்புக்கள் உள்ளன. இரண்டுறக்அத்உள்ள தொழுகைஸுப்ஹ்தொழுகை. இதில் ஓர்அத்தஹிய்யாத்இருப்பு உண்டு.

எனினும் மேற்கண்ட ஐவேளைத் தொழுகைகளில் ஒரு தொழுகையில் மட்டும் நான்குஅத்தஹிய்யாத்இருப்புக்கள் இருக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் உண்டு. அது எந்தத் தொழுகை? அதற்கான சந்தர்ப்பம் எது?


(விடை விரைவில்