இனியோரே!
அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு
இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன்.
நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில துர்ப்பாக்கியவாதிகள் நம்பாமல் கேலிசெய்தாலும் அவர்களின் கேலியால் அவ்விடயம் பொய்யாகிவிடாது. அக்கேலி அப்போலிகளின் அறியாமையின் வெளிப்பாடாகும்.