Mar 25, 2015

அம்பா நாயகம் நினைவு மஜ்லிஸின் தொகுப்பு

இந்தியா தமிழ் நாடு கம்பம் நகரில் சமாதி கொண்டுள்ள அஸ்ஸெய்யித் முஹம்மத் அப்துர் றஹ்மான் கம்பமீ (அம்பா நாயகம்) அன்னவர்களின் நினைவாக 24.03.2015 செவ்வாய்க்கிழமை அன்று இஷா தொழுகையின் பி்ன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.


இந்நிகழ்வில் அம்பா நாயகம் அன்னவர்களுக்காக சூறா யாஸீனும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் இயற்றிய மௌலூதுப் பாடலும் பாடப்பட்டு ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களால் அன்னாரின் சில சரிதைகளைக் கூறி இனிதே ஸலவாத்துடன் நிறைவெய்தியது.

அல்ஹம்துலில்லாஹ்