Nov 24, 2015

மாபெரும் மீலாத் தினப் போட்டி - 2015

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

புண்ணியமிக்க மாதத்தில் கண்ணியமிக்க நபீகளாரைப் புகழ்வோம்! 

அகிலத்தில் அருட்கொடை, மதீனத்தின் முத்து, நபித்துவத்தின் மகுடம், ஈருலக வேந்தர், ஆருயிர் நாதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக எமது ஷம்ஸ் மீடியா யுனிட் ஏற்பாடு செய்துள்ள...

மாபெரும் மீலாத் தினப் போட்டி - 2015

காலம் : 19.12.2015 (சனிக்கிழமை)            20.12.2015 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் : மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத், தீன் நகர், காத்தான்குடி.

அடுத்த தலைமுறைக்கான புதிய தேடல்...


கிறாஅதுல் குர்ஆன் :
*)  இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*)  முதலாவது பிரிவு 10-15 வயதிற்குற்பட்டதாகவும்,
     இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*)  இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*)  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


மணிமொழிகள் மனனம் :
*)  இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*)  வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*)  ஐந்து தலைப்புக்கள் வழங்கப்படும். ஏதேனும் ஒரு தலைப்பில்
     ஐந்திற்கும் குறையாத ஹதீஸ்கள் கூறப்படல் வேண்டும்.
*)  தலைப்புக்கள் :      1) நபீகளாரின் அன்பு  
                                                       2) நபீகளாரின் அற்புதங்கள்
                                                    3) நபீகளாரைத் தரிசித்தல்
                                               4) நபீகளாரைப் புகழ்தல்
                                              5) குர்ஆனும் கல்வியும்
*) ஹதீஸ்களை மனனம் செய்து,தமிழ் மொழிபெயர்ப்புடன் சொல்லவேண்டும்.


இஸ்லாமிய கீதம் :
*)  நீங்கள் தெரிவு செய்யும் பாடல்கள் பெருமானார் ஸல்லல்லாஹு
     அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பற்றியதாக இருத்தல் வேண்டும்.
*)  இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*)  முதலாவது பிரிவு 15 வயதிற்குற்பட்டதாகவும்,
     இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*) இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அதான் சொல்லல் :
*)  இப்போட்டியில் ஆண்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.
*)  வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*)  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


இஸ்லாமிய நாடகம் :
*)  சுன்னத் வல் ஜமாஅத் கருப்பொருளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
*)  08-10 நிமிடம் வரை நாடகம் நடித்துக் காட்ட வேண்டும்.
*)  ஒரு குழுவில் 5இற்கும் மேற்படாத கதாபாத்திரங்கள் கலந்து கொள்ளலாம்.
*)  வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*)  இப்போட்டியில் ஆண்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.
*)  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


கவிதை :
*)  நீங்கள் எழுதும் கவிதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வர்ணனையாக இருத்தல் வேண்டும்.
*)  24-28 வரிகளுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
*)  கண்டிப்பாக சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும்
*)  வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*)  15.12.2015ம் திகதிக்கு முன்னர் எம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும்
*)  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


அறபு எழுத்தணிக்கலை :
*)  உங்கள் கற்பனையில் தோன்றும் அறபு வசனங்களை எழுத்தணிகளாக 
     வரைய முடியும்.
*)  A3 அளவுடைய வெள்ளைக் கடதாசியில் விரும்பிய வர்ணங்களைப் பயன்படுத்தி வரையலாம்.
*)  கண்டிப்பாக சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
*)  வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*)  இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*)  15.12.2015ம் திகதிக்கு முன்னர் எம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும்
*)  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


பேச்சுப் போட்டி :
*)  உங்களின் பேச்சில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
     அன்னவர்களின் சிறப்புக்களை எடுத்துக் கூற வேண்டும்.
*)  5-7 நிமிடங்களுக்குள் பேச்சு மனனம் செய்து பேச வேண்டும்.
*)  விரும்பிய மூன்று மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் பேசலாம்.
                                                                    1) தமிழ்           
                                                                             2) ஆங்கிலம்         
                                                         3) அறபு
*)  இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*)   முதலாவது பிரிவு 15 வயதிற்குற்பட்டதாகவும்,
      இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*)   நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


பொதுவான விதிமுறைகளும், நிபந்தனைகளும்....

*) போட்டியாளர்கள் விரும்பின் எம்மால் நிர்ணயிக்கப்பட்ட எட்டு போட்டிகளிலும் பங்கு கொள்ளலாம்.

*)  ஒரு போட்டியாளர் ஒரு போட்டியில் ஒரு முறை மாத்திரமே பங்குபற்ற முடியும்.

*) போட்டிகளுக்கு வரும் போது அப்போட்டிகளுக்கு பொறுத்தமான சீருடையுடன் வருகை தரவேண்டும்.

*) உரிய நேரத்தில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகும். போட்டியாளர் உரிய நேரத்திற்கு வருகை தர தவரும் பட்சத்தில் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்.

*)  ஒவ்வொரு போட்டிக்கான நேரமும், நாளும் ~ம்ஸ் நியூஸிலும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் விளம்பரப்பலகைகளிலும் 15.12.2015ம் திகதி அன்று அறிவிக்கப்படும்.

*) விண்ணப்ப முடிவுத்திகதியான 12.12.2015ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன்பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

*)  போட்டிக்காக நியமிக்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, அதுவே இறுதித் தீர்ப்பாகவும் கருத வேண்டும்.

*)  போட்டிக்களின் விபரங்கள் தொடர்பாக 18.12.2015 (வெள்ளிக்கிழமை) பி.ப 04:00 மணிக்கு கா.குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கூட்டம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு விண்ணப்பித்தாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பங்களுக்கும், விபரங்களுக்கும்.....
SHUMS Media Unit
BJM. Building, AJA. Mawatha, Kattankudy-06.
 Tel : 065 22 48968       Mob: 077 4849786, 077 9233971

விண்ணப்ப முடிவுத் திகதி : 12.12.2015

++++++++++++++++++++++++++++++++++++++



Nov 21, 2015

لماذا تخلع نعليك قبل دخولك المسجد؟

أيّها الأخ المسلم! السلام عليكم ورحمة الله وبركاته.

واعلم ياأخي أنّ الأعمال التّي فرضها الله عليك من الصلاة والصوم والحجّ والزّكاة وغيرها، والأعمالَ التي سنّها لك الرسول صلّى الله عليه وسلّم وشرعها لها أسباب وأغراض كما لها دلائل من الكتاب والسنّة، يقبلها العقل السليم والفهم المستقيم، ولكنّ الفقهاء وعلماء هذا الزمان يذكرون الأحكام والدلائل ويتركون ذكر الأسباب والأغراض، ويقولون (الفقه نقل لاعقول فاعملوا بما اُمِرتم وكما اُمِرتم ولكن لاتبحثوا عن الأسباب والأغراض، ) هذا قول مردود لايقبل، ولايعتمد عليه، ولايؤخذ به، لأنّه يمنع الباحث عن البحث، والمتَدبِّر عن التّدبّر، هذا المنع خطأ وغير مناسب، لأنّ البحث يعين صاحبه لمعرفة الحقّ والصّواب، وكذلك التدبّر، قال الله تعالى أفلا يتدبّرون القرآن أم على قلوب أقفالها، والله تعالى حثّ النّاس بالتدبّر، وهؤلاء يغلقون باب التدبّر، وكذلك بحث الأحاديث وتدبّرها،

Nov 17, 2015

ஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்

எழுதியவர்: மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ

13.11.2015 அன்று ஜும்அஹ் தொழுகையின் பின் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்


அன்பினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.

அறபு மொழியில் எழுதும் போது (ص، صلعم) என்றும், தமிழ் மொழியில் எழுதும் போது (ஸ, ஸல்) என்றும்இ ஆங்கில மொழியில் எழுதும் போது (SAL, SAWS) என்றும் ஸலவாத்தை சுருக்கியே குறிப்பிடுகின்றனர்.

Nov 15, 2015

அஷ்ஷஹீத் பாறூக் காதிரீ அவர்களின் நினைவுதின சிறப்புக்கட்டுரை

கொள்கைப் போர் புரிந்த புரட்சிப் புயல் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் 


By : MIM. Ansar (Teacher) 

فسألوا أهل الذكر إن كنتم لاتعلمون (النحل43 )43 

“பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லாதஃலமூன்” நீங்கள் அறியாதவர்களாகவிருந்தால் இறை தியான சிந்தனையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களாக.
 (அல்குர்ஆன் -நஹ்ல் : 43) 

“உலமாக்கள் நபீமார்களின் வாரிசுகள்” 
(புஹாரீ-10முஸ்னத் அஹ்மத்-21336)

மேற்படி அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றின் போதனைப்படி மக்ளை இறை வழியின்பால் அழைத்தவர்கள்தான் எமது ஆத்மீக வழிகாட்டிகளான அவ்லியாக்களும், இமாம்களும் ஸாலிஹான உலமாக்களும் ஆவர். இவர்கள் இவ்வுலக மக்களுக்கு இறைஞான தத்துவங்களையும், அண்ணலாரின் அகமியங்களையும், அள்ளி வழங்கினார்கள். இதனால் கறை படிந்த எத்தனையோ உள்ளங்களில்போடப்பட்டிருந்த திரைகள் கிழித்தெறியப்பட்டு மெய்ஞ்ஞான தீபம் எனும் ஒளிச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இவ்வாறு எண்ணற்ற முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏகத்துவத்தை ஏற்றி வைத்த அறிஞர்களில் ஒருவர் தான் சங்கைக்குரிய மௌலானா மௌலவீ ஆஷிஹுல் அவ்லியா அஷ்ஷஹீத் MSM. பாறூக் (காதிரீ) அவர்களாகும். 

Nov 14, 2015

நபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்

ஸபர் மாத தலைப்பிறை பிறந்து விட்டாலே நாம் அடையும் சந்தோசத்திற்கு அளவேயில்லை... ஏனெனில் அகிலத்தின் அருள் ஜோதி, மதீனத்து மாநபீ முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பமாவதாலேயே... அந்த வகையில் இவ்வருடமும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நபீபுகழ் காப்பியம் புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 13.11.2015 வெள்ளிக்கிழைமை அன்று இஷாத் தொழுகையின் பின் ஆரம்பமானது.

இவ்வருடம் ஸபர் மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இரவுகளில் இஷாத் தொழுகையின் பின்னர் அண்ணலார் பேரிலான வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நடைபெறும்.

இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பி்த்து, அண்ணலாரின் புகழ்பாட அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Nov 13, 2015

மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!


அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!



மௌலவீ HMM. .இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய
வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து

இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள்.
இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும்.
ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே,

01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள்.

Nov 12, 2015

سبحان من أظهر الأشياء وهو عينها


فَمَا ثَمَّ مِنْ شَيْئٍ سِوَى اللهِ  فِى الْـوَرَى                وَمَا ثَــمَّ مَـسْمُـوْعٌ وَمَـا ثَـمَّ سَامِـعُ
هُوَ الْعَرْشُ وَالْكُرْسِيُّ وَالْـمَـنْظَرُ  الْعَلِيْ              هُوَ الـسِّدْرَةُ اللاَّتِيْ اِلَيْـهَا الْمَـرَاجِـعُ
هُوَ الْاَصْلُ حَقًّا وَالْـهَـيُوْلَـى مَـعَ الْهَبَا                 هُـوَ الْـفَـلَكُ الدَّوَّارُ وَهْوَ  الطَّـبَائِـعُ
هُوَ النُّـوْرُ وَالظَّـلْمَاءُ وَالْمَاءُ  وَالْـهَـوَى               هُوَ الْـعُـنْـصُرُ النَّـارِيُّ وَهْـوَ الْبَلاَقِعُ
هُوَ الـشَّمْـسُ وَالْبَدْرُ الْمُنِيْرُ  هُوَ السُّهَا                هُـوَ الْاُفْـقُ وَهْوَ النَّجْـمُ  وَهْوَ الْمَوَاقِعُ
هُوَ الْمَرْكَزُ الْحُكْمِيْ هُوَ الْاَرْضُ وَالسَّمَا             هُوَ الْمُـظْـلِمُ الْمِـقْـتَامُ وَهْوَ  اللَّوَامِعُ
هُــوَ الـدَّارُ  وَالْأَثْـلُ وَالْـحَيُّ وَالْـغَـضَا               هُـوَ الـنَّاسُ وَالـسُّكَّانُ وَهُـوَ  الْمَرَاتِعُ
هُوَ الْحُكْمُ وَالتَّـئْـثِـيْرُ وَالْأَمْرُ  وَالْقَضَا                هُـوَ الْـعِـزُّ وَالسُّـلْطَانُ  وَالْـمُـتَوَاضِعُ
هُـوَ الَّلفْظُ وَالْـمَـعْـنَى وَصُـوْرَةُ كُلِّ مَا                يُـخَالُ مِـنَ الْمَـعْـقُوْلِ اَوْ هُـوَ وَاقِــعٌ
هُـوَ الْـجِنْسُ وَهُـوَ النَّوْعُ وَالْفَصْلُ اِنَّهُ                هُـوَ الْـوَاجِـبُ الـذَّاتِــيُّ  وَالْمُـتَمَانِعُ
هُـوَ الْـعَـرَضُ الطَّارِيُّ نَعَمْ وَهُوَ جَوْهَرٌ              هُـوَ الْـمَعْدِنُ الصَّـلْدِيُّ وَهُوَ  الْمَوَانِعُ
هُـوَ الْـحَـيَـوَانُ الْـحَـيُّ وَهُـوَ حَـيَاتُـهُ                  هُـوَ الْوَحْـشُ وَالْإِنْسُ  وَهُوَ السَّوَاجِعُ
هُـوَ الْـقَـيْـسُ بَـلْ لَـيْلَاهُ وَهُـوَ بُـثَيْنَةُ                   اَجَلْ بِـشْرُهَا  وَالْخَيْفُ وَهُوَ الْاَجَارِعُ
هُوَ الْعَقْلُ وَهُوَ الْقَلْبُ وَالنَّفْسُ وَالْحَشَا                هُـوَ الرُّوْحُ وَهُوَ الْـجِـسْمُ  وَالْمُتَدَافِعُ
هُوَ الْـمُـوْجِـدُ الْأَشْـيَاءَ وَهُـوَ وُجُـوْدُهَا                وَعَـيْنُ ذَوَاتِ الْـكُلِّ وَهُـوَ الْـجَوَامِـعُ
وَمَا الْـخَـلْـقُ فِى الـتِّـمْثَالِ اِلاَّ كَثَلْجَةٍ                   وَاَنْـتَ بِـهَا الْـمَاءُ الَّـذِيْ هُـوَ  نَـابِـعُ
فَمَا الـثَّـلْجُ فِـى تَـحْقِـيْـقِنَا غَيْرَ مَائِهِ                    وَغَيْـرَانِ فِى حُـكْمٍ دَعَـتْهَا  الشَّرَائِعُ
وَلكِنْ بِـثَـوْبِ الـثَّلْـجِ يُـرْفَعُ حُكْمُهُ                     وَيُوْضَعُ حُـكْمُ الْـمَاءِ وَالْأَمْـرُ  وَاقِعُ
تَـجَـمَّعَـتِ الْأَضْدَادُ فِى وَاحِـدِ الْـبَـهَا                  وَفِـيْهِ تَـلاَشَـتْ فَـهْـوَ عَنْهُنَّ  سَاطِعُ

(النّادرات العينية - للشيخ عبد الكريم الجيلي رحمه الله ص - 70-75)

Nov 3, 2015

தவ்ஹீத் சரியாம்! வஹ்ததுல்வுஜூத் பிழையாம்!

قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه "التفحة المرسلة " (إعلمو أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا في صفاته الحقيقيّة كلّها، لأنّ ذالك الوجود كما أنّه هنّ حيث هو هو أي من غير اعتبار شيئٍ مّا معه من صفة ولا اسم مطلق غير محدود، كذلك صفاته الحقيقيّة منبسطةٌ أي غير مخصوصة بمحلّ خاصّ من الذّات غير محدودة، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر بنفسه وتجلّى بأسمائه وصفاته بالشكل أي بالأثروالحدّ، يعني أنّ ذلك الوجود ظهر وتجلّى فى الخارج بصور المخلوقات على نفسه وعلى غيره مدركا لنفسه ولغيره من المخلوقات المدركة كالثّقلين والملائكة. ولم يتغيّر بسببه هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه من عدم الشكل وعدم الحدّ، إذ ظهورُ أثره كذلك لايلزم منه شيئ من مذكورات المنفيّة، بل هو الآن إلى الأبد كما كان عليه فى الأزل،)

(هذا الكتاب "التحفة المرسلة" كتاب مملوء بوحدة الوجود ومبدوء بها ومختوم بها، وهذا أمر ظاهر معروف يعرفه الصّبيان والأطفال، ولكنّ العجب الذي لاعجب فوقه أنّ المفتي الّذي أفتاني وأصحابي بالرّدّة استدلّ بهذا الكتاب، اَللهم أصلح خبله الّذي أصاب عقلة، أيّها العلماء المنكرون لوحدة الوجود إفتحو أعينكم واستيقظوا من رقادكم وتوبوا إلى الله على ما صدر منكم)