Oct 30, 2015

الحقيقة الوجوبية

أيّها الإنسان! جدّد التّوبة فى غالب الأزمان، وأكثر من الإستغفار والصّلاة والسّلام على السيّد المختار، وذكر مولاك، الّذي على موائد كرمه ربّاك.

واعلم أنّ هذه الأمور كلّها تجوز من قيام وقعود، واضطجاعٍ ورقود فى الخلوة والجلوة مع الإستدبار والإستقبال، بوُضوء ومن غير وضوء ولو عليك جنابة، وإن كان مع الوضوء وباقي الشّروط اكمل فى الإثابة، والغرض أن لاتغفل عن الطاعة، كلّما أمكنك حَذَرًا من التّفريط والإضاعة، ولو كلّ ساعة مرّة من ذلك، ليتّصل من قلبك النّور من السيّد المالك وينفعك ذلك، عند ذكر مجلسك المخصوص، فإنّ قلبك حينئذ لا يتحوّل عن استحضار عظمة مولاك، كأنّه بنيان مرصوص وتجدُه خاليا من التّشويش والإختلاط، منشرحا للطّاعة فى غاية القوّة والنّشاط، كلّ ذلك لاتّصال قلبك بالأنوار، بسبب تجديدك الطاعة با لنّهار، إذ الّلغو وترك العبادة موجب للكسل وشغل القلب وزيادة،

(منقول من رسالة العهد الوثيق لمن أراد سلوك احسن طريق.
للإمام الشّيخ محمود خطّاب السّبكي)

Oct 28, 2015

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன?

ஆக்கம் - நூறுல் மஸாபீஹ் - கடார்
-----------------------------------------------------------

1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா!

அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா?

இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக - தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

2) "I went to shop" - இவ்வாங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படிவசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனேன்" என்று மொழிபெயர்ப்பது சரியான மொழிபெயர்ப்பாகுமா!!! அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களா!

அதுபோன்றுதான் இருக்கிறது லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு நீங்கள் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு!

Oct 26, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 11


அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின்னர் அவர்களுக்கு அதனருளினால் கண் நோயோ, தலையிடியோ ஏற்படவில்லை. அண்ணலெம்பெருமானின் உமிழ் நீரின் அருளினால் அவற்றிலிருந்து நிவாரணம் பெற்றார்கள்.

மாத்திரமல்ல இந்நிகழ்வின் போது ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்த காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களுக்காக ஒரு பிரார்த்தனை புரிந்தார்கள். அதன் பின்னர் சூடு, குளிர் ஆகியவை அவர்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அண்ணலின் உமிழ் நீரின் அருளினால், அண்ணலின் பிரார்த்தனையின் பொருட்டினால் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக்கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள். ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ لَيْلَىَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ يَسْمُرُ مَعَ عَلِيٍّ كَرَّمَ اللهُ وَجْهَهُ. وَكَانَ عَلِيٌّ كَرَّمَ اللهُ وَجْهَهُ يَلْبِسُ ثِيَابَ الصَّيْفِ فِي الشِّتَاءِ. وَثِيَابَ الشِّتَاءِ فِي الصَّيْفِ. فَقُلْتُ لِأَبِيْ لَوْ سَأَلْتَهُ فَسَأَلَهُ. فَقَالَ إِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بَعَثَ إِلَيَّ. وَأَنَا أَرْمَدُ الْعَيْنِ يَوْمَ خَيْبَرَ. فَقُلْتُ يَارَسُوْلَ اللهِ إِنِّيْ أَرْمَدُ. فَتَفَلَ فِيْ عَيْنِيْ. فَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ. فَمَا وَجَدْتُ حَرًّا وَلاَ بَرْدًا مُنْذُ يَوْمَئِذٍ.

அப்துல்லாஹ் இப்னு அபீ லைலா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

எனது தந்தை அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுடன் இரவு வேளையில் பேசிக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக் கூடியவர்களாக இருந்தார்கள். இது பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டாலென்ன என்று எனது தந்தையிடம் கூறினேன். எனது தந்தை இது பற்றி அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

ஹைபர் யுத்த தினத்தில் நான் கண்ணோய்யுற்றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னை வரும்படி செய்தியனுப்பினார்கள். நான் அவர்களிடம் “யாரஸுலல்லாஹ்! நான் கண்நோயுற்றிருக்கின்றேன்” என்று கூறினேன். உடனே அவர்கள் எனது கண்ணில் உமிழ்ந்தார்கள். பின்னர் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.

“இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கி 
வைப்பாயாக அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெறவில்லை.”
ஸியறு அஃலாமின் நுபலா, பாகம் – 01 பக்கம் – 571

وَأَرْسَلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَلِيٍّ يَوْمَ خَيْبَرَ وَكَانَ أَرْمَدَ. فَتَفَلَ فِيْ عَيْنَيْهِ. وَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّوَالْبَرْدَ. قَالَ فَمَا وَجَدْتُ حَرًّا وًلاَبَرْدًا مُنْذُ ذَلِكَ الْيَوْمِ. وَلاَرَمِدَتْ عَيْنَايَ.

ஹைபர் யுத்த தினத்தில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு செய்தியனுப்பினார்கள். அந்நேரம் அவர்கள் கண்நோயுற்றிருந்தார்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களின் இரண்டு கண்களிலும் உமிழ்ந்தார்கள். பின்னர் இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கிவிடுவாயாக என்று பிரார்தித்தார்கள்.

அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெற்றுக் கொள்ளவில்லை. எனது கண்களில் கண்நோய் ஏற்படவுமில்லை என்று அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கூறினார்கள்.
அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ்
பாகம் – 04 பக்கம் – 485

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கண்நோயுற்றிருந்த வேளையில் அவர்களையழைத்து, தங்களருகில் அவர்களை அமரச்செய்து அவர்களின் கண்களில் உமிழ்ந்திருக்கின்றார்கள். அருள் நிறைந்த அவர்களின் கரங்களினால் அவர்களின் கண்களைத் தடவியிருக்கின்றார்கள். என்பதை மேற்கூறப்பட்டவற்றிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணலின் உமிழ் நீரின் பறக்கத்தினால், அண்ணலின் கரங்களின் பறக்கத்தினால், அண்ணலின் பிரார்த்தனையின் பறக்கத்தினால் கண்நோயிலிருந்து நிவாரணம், தலையிடி ஏற்படாமை, சூடு, குளிர் ஆகியவற்றின் தாக்கம் ஏற்படாமை போன்ற பிரயோசனங்களை பெற்றார்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.


அண்ணலவர்கள் இறை ஜோதியல்லவா! அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. எங்களைப் போன்ற சாதாரண மனிதன் என்று அவர்களை நம்புபவன் முஃமின் அல்ல. அவன் வழிகெட்டவன். அண்ணலின் ஷபாஅத்தை விட்டும் தூரமானவன். அண்ணலின் அருள் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஆலா எமக்க அருள் புரிவானாக.

- ஆமீன் யாறப்பல் ஆலமீன் -

Oct 23, 2015

முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வுகள்

இஸ்லாமியப் புதுவருடமான முஹர்றம் மாதத்தை சங்கை செய்யும் முகமாகவும், இஸ்லாத்திற்காக உயிர் நீத்த நபீமணி பேரர் ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், பாசிப்பட்டணத்தில் கொழுவீற்றிருந்து அற்புதங்கள் நிகழ்த்தும் அஸ்ஸெய்யித் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 21.10.2015ம் திகதியன்று இரு மகான்களின் பேரிலான திருக்கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.

தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கத்முல் குர்ஆன், மௌலிது ஹஸனைன், நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் மௌலித் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று இறுதித் தினமான 23.10.2015ம் திகதி அன்று இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையினைத் தொடர்ந்து தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

- அல்ஹம்துலில்லாஹ் -

இந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !

முஹர்றம் மாதத்தின் ஆஷூறா தினத்தையொட்டி 22.10.2015 அன்று அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையினரால் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை
*********************************************************************

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

முஹர்றம் மாத பத்தாம் நாள் ஆஷூறா தினமாகும். அன்றிரவு மஃரிப் தொழுகையின் பின் அல்லது இஷாஉ தொழுகையின் பின் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரால் ஒரு தரம் யாஸீன் ஓதுங்கள். அல்லது மூன்று தரம் ஓதுங்கள். துஆ ஓதும் போது ஸெய்யிதுனா அலீ, ஸெய்யிததுனா பாதிமா, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

அன்றிரவு முடிந்தளவு தான தருமம் செய்யுங்கள். ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு வழங்குங்கள்.  உங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள பள்ளிவாயல் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் செயற்படும் பள்ளிவாயல் ஆயின் அங்கு தொழவருகின்றவர்களுக்கும் வழங்குங்கள்.

Oct 22, 2015

முஹர்றம் தின சிறப்பு கட்டுரை

முஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய 
“ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள். 
- ​மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ - 


நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூரப்பட வேண்டியவர்களில் அதிவிஷேடமானவர்கள்.

இவர்கள் ஹிஜ்ரீ 4ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 5ல் மதீனஹ் முனவ்வறஹ்வில் பிறந்தார்கள். 

இவர்கள் பிறந்த போது நபீ ஸல் – அம் அவர்கள் தங்களின் அருள் நிறைந்த உமிழ்நீரை ஹூஸைன் றழி அவர்களின் வாயில் வைத்து சுவைக்கச்செய்தார்கள். அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள். அவர்களின் வாயில் உமிழ்ந்தார்கள். அவர்களுக்காக “ துஆ ” பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் பிறந்து ஏழாவது நாளில் அவர்களுக்கு “ ஹூஸைன் – சின்ன அழகர் ” என்று பெயரிட்டார்கள். அதேநாளில் அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து “ அகீகஹ் ” கொடுத்தார்கள். தங்களின் அன்புப் புதல்வி பாதிமஹ்வை அழைத்து “ ஹூஸைனுடைய தலைமுடியை சிரைத்து அதை நிறுத்து, அதன் நிறைக்கேற்ப வௌ்ளியை “ ஸதகஹ் ”வாக கொடுங்கள் என்று கூறினார்கள். 

Oct 21, 2015

புனித ஆஷூறாவின் தத்துவங்களை அறிந்து செயற்படுவோம்.

மௌலவி H.M.M. இப்றாஹீம் நத்வீ 

சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது.

தற்போதைய ஹிஜ்ரீ ஆண்டு 1437 ஆகும். இம்மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ”ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. 

Oct 14, 2015

இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.

-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி. 
HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான். 

முகம்மது நபி (ஸல்)அவர்கள் 

அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான். 

மலக்குகள் 

இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான்.