“துன்யா” என்ற சொல் “அத்னா” என்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யா” என்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும் “ஆலம்” உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
“துன்யா” என்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்)
















