தொடர்
-02
றமழான் மாதம் அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன் “குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.
றமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் “அருள்” கொண்டு அடியார்களுக்கு “றஹ்மத்” வழங்குதல் , பிழை பொறுத்தல், நரகத்தில் இருந்து விடுதலை அளித்து
சுவனத்தை பரிசாக வழங்குதல்
ஆகியவற்றை அல்லாஹ் செய்கின்றான்.
இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்கலாம். நோன்பு
எனும் வணக்கத்தை புனித மிக்க இந்த றமழான் மாதத்தில் உள்ளடக்கி
அடியார்களுக்கு மூன்று அன்பளிப்புக்களை வழங்குகின்றான். இம்மூன்றும் மனிதனை புனிதனாக்குவதில்
முக்கியமானவை ஆகும்.

















