Nov 24, 2014

நபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்

ஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்..... ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்.... ஏன் தெரியுமா? அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்......

அந்த வகையில்...

நபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ  றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 23.11.2014 அன்று இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

அல்லாஹ் உதவியால் ஸபர் மாதம் முழுவதும் இஷா தொழுகையின் பின் புனித கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வும், ஸபர் மாதம் இவ்வுலகை விட்டும் பிரிந்த ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் வாப்பா நாயகம் அன்னவர்கள் பேரிலான மௌலிதும் ஓதப்படும்.

அண்ணலார் மேல் பேரன்பு கொண்ட அனைவரும் இம்மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், தங்களது வீடுகளில் தினமும் நபீபுகழ் மாலை புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை ஓதி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.











Nov 21, 2014

மௌலவீ ஸுபி இம்தாதீ அவர்களின் கடிதத்திற்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் மறுப்புக் கடிதமும் ஆதாரமும் 20.11.2014

ஸுஹூர் முஹம்மத் என்பவரால் 11.11.2014 அன்று  எமது ஷம்ஸ் மீடியா யுனி்ட்டின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு மௌலவீ ஸூபி இம்தாதீ அவர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கான மறுப்புக் கடிதமும் அதற்கான ஆதாரங்களும் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் 20.11.2014 அன்று பதிவுப் தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியினை எமது இணையத்தளத்தில் பதிவிடுகிறோம்.





Nov 18, 2014

சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு - 2014

காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு - 2014 

வஹ்ஹாபிஸ வழிகெட்ட கூட்டத்தினருக்கு எதிராக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் உலமாஉகளுக்கான அமர்வின் 02ம் நாள் சங்கைக்குரிய ஷெய்ஹுனா அல் ஆலிமுல் பாழில், அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....


ஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்

Nov 15, 2014

கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீப்


Nov 14, 2014

மல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.

Nov 10, 2014

பிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்

ஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. 

Nov 8, 2014

மௌலவீ பெஸுர் றஹீம்,மௌலவீ ஸூபீ இம்தாதீ ஆகியோருக்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பதில் கடிதங்கள்

07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ பௌஸுர் றஹீம் அன்னவர்களுக்கு எழுதப்பட்ட பதில் கடிதம்


07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ ஸூபீ இம்தாதீ அவர்களுக்காக எழுதப்பட்ட பதில் கடிதம்