Sep 20, 2013

பாங்கு சொல்லுமுன் சலவாத் சொல்வது பற்றி ஒர் ஆய்வு

சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ  A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள்

எல்லாப்புகழும் ஏகன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்,ஸலாம் இரண்டும் வழி கேட்டைஅழித்து நல்வழியை காட்டினவர்களான நபீ(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் அவ்லியாஉகள், நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.!

ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் செல்லும் வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது.

ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின் முதலில் அஸ்தஃபிருல்லாஹல் அளீம் என்று மூன்று தரமும்.

Aug 25, 2013

சகாத் பற்றி ஓர் ஆய்வு

தொடர் - 02...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

விபரம்

1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.

2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.

3. உடை​மைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.

Jul 19, 2013

நோன்பின் இரகசியங்கள்.

தொடர் – 03
அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழிஅவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ

விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.


நோன்பு என்பது 3 படித்தரங்களை உடைய ஒன்றாகும்.
  1. பொதுவானவர்களின் நோன்பு
  2.  விஷேடமானவர்களின் நோன்பு
  3. அதி விஷேடமானவர்களின் நோன்பு

பொதுவானவர்களின் நோன்பு என்பது வயிற்றையும், மர்மஸ்தானத்தையும் தடுத்திருத்தல். விஷேடமானவர்களின் நோன்பு என்பது கேள்வி, பார்வை, நாக்கு, கை, கால் ஏனைய றுப்புக்களை பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்ளல்.
அதி விஷேடமானவர்களின் நோன்பு என்பது மோசமான எண்ணங்களை விட்டும், உலக சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை

Jul 10, 2013

நோன்பு

மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும். 

நோன்பின் பர்ழுகள்: 

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும். 

நிய்யத்: 

'நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா - இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளானநோன்பை அதாவாக நாளைபிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத்செய்து கொள்ளவேண்டும். 

Jun 28, 2013

நோன்பின் மாண்பு

தொடர்- 01...
புதிய தொடர் ஆரம்பம்

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்

நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.

Jun 10, 2013

27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அறிவித்தல் - 2013

கரீப் நவாஸ் பௌன்டேஸன் நடாத்தும்

27வது வருட உர்ஸே முபாறக் - ஹாஜாஜீ மாகந்தூரியும்
13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும்

திருக்கொடியேற்றம் - 26.06.2013 புதன்கிழமை மாலை 5.00 மணி
மாகந்தூரி - 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி
இடம் - காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் 

Jun 5, 2013

36வது வருட புனித புஹாரீ ஷரீப் நிறைவு தின நிகழ்வுகள்...

கடந்த 07.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட புனித புஹாரீ ஷரீப் 30 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 05.06.2013 புதன்கிழமை நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

Jun 3, 2013

- 26.06.1960 - விஷேட நிகழ்வு

 சங்கைக்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களால் 26.06.1960ம் ஆண்டு காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் பள்ளிவாயலும் அதன் சுற்றுமதிலும் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு  இப்பழைய பள்ளவாயல் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் அவ்விடத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகிறது.

இந்தவகையில் 06.06.2013 அன்று இதில் இறுதியாக இருந்த முன்பக்க பள்ளிவாயல் சுவரும் உடைக்கப்பட்டது. இது 53 வருட பழமையானதாகும்.