Jan 29, 2013

பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2013

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 25.01.2013 வௌ்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து சுப்ஹ் தொழுகை வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய இருநூற்கள் இம்மஜ்லிஸில் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக அலுவலகமும் அன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளே...

புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்

 அல்ஹாஜ் அப்துல் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், இப்றாஹீமிய்யஹ் குர்ஆன் மத்ரஸா, றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றில் புனித றபீஉனில் அவ்வல் மாத்தத்தினைச் சிறப்பிக்குமுகமாக பூமான் நபீ புகழ்கூறும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 12 தினங்கள் நடைபெற்று 24.01.2013 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்!
புகைப்படங்கள் உள்ளே...

Jan 26, 2013

மனித உயிர்களைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு - 2013


கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.

Jan 25, 2013

கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.


முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் - ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். 

Jan 4, 2013

வாழ்த்துகிறோம்....



மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஸம்ஸ் மீடியா யுனிட்
ஸம் இணைத்தளம்

Jan 2, 2013

அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் - இலவச பாட நூல் விநியோகம் 2012

இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். 

திகதி – 26.12.2012 

வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். 

பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம். 

Dec 24, 2012

இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) 
(Justice of The Peace Whole Island)

“கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”  என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு என்றும், திருக்குர்ஆன் “தமாம் நிகழ்வு என்றும் சொல்லப்படுகிறது.

கத்ம் ஓதுதல் பித்அத்த அல்ல
இறந்தவர்களுக்கு கத்ம் ஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம் அல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த ஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத் என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.
"إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره
والطبراني (12/444 رقم 13613) والبيهقي في الشعب (7/16 رقم9294)

Dec 11, 2012

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 ...

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்- 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்! 

வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர். 

இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. 

சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான்.