Dec 24, 2012

இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) 
(Justice of The Peace Whole Island)

“கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”  என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு என்றும், திருக்குர்ஆன் “தமாம் நிகழ்வு என்றும் சொல்லப்படுகிறது.

கத்ம் ஓதுதல் பித்அத்த அல்ல
இறந்தவர்களுக்கு கத்ம் ஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம் அல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த ஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத் என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.
"إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره
والطبراني (12/444 رقم 13613) والبيهقي في الشعب (7/16 رقم9294)

Dec 11, 2012

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 ...

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்- 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்! 

வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர். 

இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. 

சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான். 

Nov 28, 2012

நினைவுதின நிகழ்வு


இந்தியாவின் தமிழ் நாட்டின் பாசிப்பட்டணம் எனும் ஊரில் கொழுவீற்றிருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் செய்யிதினா பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் அன்னாரின் அருமைத் தகப்பனார் ஷெய்ஹு முஹம்மத் (றாவுத்தர் ஸாஹிப் மௌலானா) அன்னவர்களினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் 28.11.2012 அன்று நடைபெற்ற அவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளைம், இப்புனித மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்மீக உரை நிகழ்த்திய சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களையும், தபர்றுக் விநியோகத்திற்காக தயாராகும் சோறு சமையல் பகுதியையும், சங்கை மிகு வலீமார்களின் அருள் வேண்டி இம்மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்ட முஹிப்பீன்களையும் படத்தில் காணலாம்.

Nov 26, 2012

முஹர்றம் நிகழ்வுகள் - ஹிஜ்ரி 1434

பெருமானார் பேரர் செய்யிதுனா ஹுஸைன் ஸஹீதே கர்பலா அவர்களின் மௌலிது ஹஸனைன் மௌலித் நிகழ்வுகள் எமது காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 15.11.2012 அன்று ஆரம்பமாகி இஷாத் தொழுகையின் பின்னர் புனித மௌலித் ஷரீப் ஓதப்பட்டு 24.11.2012 அன்று நிறைவுபெற்றது.



Nov 24, 2012

நிதி கையளிக்கும் நிகழ்வு

சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே.... 

Nov 17, 2012

உதவித்தொகை வழங்கும் நிகழ்வு - 2012


வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

Nov 8, 2012

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்


நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 



Oct 24, 2012

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. 
HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். 

அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை.