Oct 24, 2012

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. 
HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். 

அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. 

Oct 12, 2012

வஸீலாத் தேடலாமா? --

(தொடர் 08......)

உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.

Aug 29, 2012

இஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-

யாருக்காவது நோய்ஏற்பட்டால், அல்லது கண்திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கரசத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும்ஓதி ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும்.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்

{وننزلمنالقرآنماهوشفاءورحمةللمؤمنين}
(الإسراء-82)

Aug 24, 2012

ஸுன்னத்தானதொழுகைகள்


தொடர் - 02
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
ஸலாத்துல்வுழூ:

வுழூச்செய்தபின் தொழும் தொழுகை' என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின்,

ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما

என்ற ஆயத்தை ஓதி'அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று முறை கூறி 'குல்யாஅய்யுஹல்காபிரூன்' சூராவைஓதுவதும்

Aug 23, 2012

அறிவித்தல்

அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்...

23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு -- கொடியேற்ற நிகழ்வு  

பி.ப 5.15 மணிக்கு -- கத்முல்குர்ஆன்

மஃரிப் தொழுகையின்பின் -- மௌலித் மஜ்லிஸ்

இஷாத்தொழுகையின்பின் -- பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
                                                              தபர்றுக்விநியோகம், ஸலவாத்   

மேற்படி நிகழ்வுகளில் கலந்து பெரிய ஆலிம் வலீ அவர்களின் பேரருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய்வேண்டுகிறோம்.




Aug 17, 2012

கொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?

தொடர் .. 02
-மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP)
(சாமஸ்ரீ, தேசகீர்த்தி)

ஆன்மீகக் கொடிகள்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன.

யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள்.

Aug 14, 2012

முப்பெரு நாதாக்கள்

இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள்
அஷ்ஷெய்க் அகமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் 
ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.

இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு கடைசிக் குழந்தையாய் பிறந்தார்கள். 

Jul 31, 2012

கத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு

அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.