ஒரு “ஷெய்கு”
ஞான குருவிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சை பெற்று அவரின் “முரீத்” ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
“குரு”வாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும் “கமாலிய்யத்” பெற்றவராக இருத்தல் வேண்டும் – நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும்.
“முரீத்” சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.
குருமாரில் இருவகையுண்டு. ஒருவர் “விலாயத்” என்ற ஒலித்தனம் பெற்றவராகவும், ஆன்மீகத்தை சீர் குலைக்கும் நோய்களுக்கேற்ற மருந்துகள் வழங்கி தனது சிஷ்யனை பக்குவப்படுத்துவராகவும் இருப்பார்.
இவர் “ஷெய்குத்
தர்பியத்” شيخ التربية சிஷ்யனை
வளர்க்கும் குரு என்று அழைக்கப்படுவார்.















