Sep 13, 2015

“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்

ஒருஷெய்குஞான குருவிடம்பைஅத்என்ற ஞானதீட்சை பெற்று அவரின்முரீத்ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

குருவாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும்கமாலிய்யத்பெற்றவராக இருத்தல் வேண்டும்நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும்.

முரீத்சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

குருமாரில் இருவகையுண்டு. ஒருவர்விலாயத்என்ற ஒலித்தனம் பெற்றவராகவும், ஆன்மீகத்தை சீர் குலைக்கும் நோய்களுக்கேற்ற மருந்துகள் வழங்கி தனது சிஷ்யனை பக்குவப்படுத்துவராகவும் இருப்பார்.
இவர்ஷெய்குத் தர்பியத் شيخ التربية  சிஷ்யனை வளர்க்கும் குரு என்று அழைக்கப்படுவார்.

Sep 12, 2015

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்

குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், ஸெய்யிதுஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக கடந்த 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் மௌலித் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. 
இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Sep 11, 2015

அல் இல்ஹாமாதுஸ் ஸனிய்யா - பீ - ஷுறூஹில் வளீபதிஷ் ஷாதுலிய்யா

الإلـهامات السّنيّة فى شروح الوظيفة الشّاذليّة


இதன் கீழ் எழுதப்பட்டுள்ள “ஸலவாத்” “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” அல்லது “அஸ்ஸலவாதுல் மிஷ்ஷீஷிய்யா” என்று சொல்லப்படும். “வளீபா” என்பது இதில் அடங்கும்.

இந்த  “ஸலவாத்” அல் ஆரிபுர் றப்பானீ, அல்குத்புல் பர்தானீ, அல் வாரிதுல் முஹம்மதிய்யு, அல் முர்ஷிதுல் காமில், அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் “றஹிமஹுல்லாஹ்” அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும்.

இவர்கள் ஹிஜ்ரீ 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த “குத்புஸ்ஸமான்” ஆவார்கள். ஹிஜ்ரீ 622ல் “ஷஹீத்” ஆக்கப்பட்டார்கள். 

ஷாதுலிய்யா “தரீகா”ஹ்வின்  மூலவர். அல்குத்புல் அக்பர் ஸெய்யிதுனா அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களின் ஆன்மீகக் குரு - ஷெய்கு - இவர்கள்தான்.

Sep 7, 2015

“லெப்பை”யா? லெவ்வையா?

லெப்பைஎன்ற சொல்லை முன்னோர்கள்லெவ்வைஎன்றும் மொழிவதுண்டு. அஹ்மத் லெப்பைஅஹ்மத் லெவ்வை என்பன போன்று 

இச்சொல் இலங்கை நாட்டு மக்களின் வழக்கத்தில் மௌலவியல்லாத, ஆனால் திருக்குர்ஆன் ஓத, ஓதிக் கொடுக்கத் தெரிந்த, மௌலித், கத்ம், பாதிஹா போன்றவை ஓதத் தெரிந்த, ஊதிப் பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்துஇஸ்ம்கட்டத் தெரிந்த ஒருவர்லெப்பைஎன்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

கொள்கை விளக்கக் கருத்தரங்கு 2ம் கட்டம்

மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்ற கொள்கை விளக்கக் கருத்தரங்கு 02ம் கட்டமாக சுன்னத் வல் ஜமாஅத் சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுக்கான செயலமர்வாக 06.09.2015 (ஞாயிற்றுக்கிமை) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணி வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Sep 5, 2015

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையேவஹ்ஹாபிஸம்என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரைவஹ்ஹாபியர்கள்என்று நாம் சொல்கின்றோம்.

இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி 1111ல் பிறந்து தன்னை இஸ்லாமியன் எனக் காட்டிக் கொண்ட முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் வளர்க்கப்பட்டு பிரபல்யமாகத் தொடங்கியதனால் அந்த அயோக்கியனின் முழுப்பெயரில் உள்ளவஹ்ஹாப்என்ற பெயரை மையமாகக் வைத்துக் கொண்டு இக்கொள்கைவஹ்ஹாபிஸம்என்றும் இக் கொள்கையைப் பின்பற்றுவோர்வஹ்ஹாபியர்கள்என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Sep 3, 2015

“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?

துன்யாஎன்ற சொல்அத்னாஎன்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யாஎன்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும்ஆலம்உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.

துன்யாஎன்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்)

Sep 1, 2015

துறவறம்

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله "ما معنى قول صوفيّ من اكتفى بالفقه عن الزّهد فَسَقَ، فأجاب بقوله معناه أنّ من تساهل فى الزّهد والورع ادّى ذلك إلى ارتكاب الشّبهات، ومن تساهل فى ارتكاب الشبهات ادّاه ذلك إلى ارتكاب الحرام، ومن تساهل فى الحرام أدّاه ذلك إلى ارتكاب الكبائرعلى أنّ الصّوفيّة رضي الله عنهم قد يطلقون لفظ السيّئة والفسق والكفر على غير معناه الشرعيّ مبالغة فى التّنفير كقولهم "حسنات الأبرار سيّآت المقرّبين، وقول سيّدي عمربن الفارض رضي الله عنه

               وإن خطرت لي فى سواك ارادة   *****  على خاطري سهوا قضيت بردّتي

فهذا ليس بردّة حقيقه،
(الفتاوى الحديثية ص – 217