Feb 19, 2014

29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்

29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி 14.02.2014 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித் மஜ்லிஸ், றாதிப் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் நடைபெற்று 16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணியளவில் தபர்ருக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

Feb 13, 2014

விஷேட அறிவித்தல்


காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜம்அஹ் பள்ளிவாயலில் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித ஜும்அஹ் தொழுகை சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் 14.02.2014 வௌ்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

Feb 11, 2014

இரத்த தான நிகழ்வு 2014


அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Feb 7, 2014

Feb 5, 2014

வாழ்த்துகிறோம்...


எமது அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ AJ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 70வது அகவை தினத்தை முன்னிட்டு ஸம்ஸ் மீடியா யுனிட் அன்னவர்கள் பரிபூரண தேகாரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்பெற்று வாழ வாழ்த்துகின்றது. ஆமீன் 


Feb 4, 2014

ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 70வது அகவை தின சிறப்புக்கவிதை

மௌலவீ  HMM. இப்றாஹீம் நத்வீ
எழுபதிலும் இலங்கும் ஞானத்தாரை!

கருணை நபியின் முன்னே

கவிஞர் ஹஸ்ஸான்,

கவிஞர் கஃப் போன்றோர்

நபீ புகழ் பாடியது

முகத்துதியல்ல!

அது வணக்கம்!

அதே போல் –

தவ்ஹீத் தோப்பில் மலர்ந்த

Feb 1, 2014

பெருமானாரின் திரு முடிகள்