மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள்
பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள்
நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள்.
நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள்.










