Dec 15, 2013
Dec 14, 2013
Nov 19, 2013
Oct 22, 2013
பெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.
3:06 PM
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள்
நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தா பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள்.
பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள்.
நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள்.
நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகுதிருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள்.
நபீயவர்கள்ஆழ்ந்தசிந்தனையின்போதுகுச்சியால்நிலத்தைசிலநேரங்களில்கீறுவார்கள்.
Sep 20, 2013
பாங்கு சொல்லுமுன் சலவாத் சொல்வது பற்றி ஒர் ஆய்வு
11:20 AM
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள்
எல்லாப்புகழும் ஏகன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்,ஸலாம் இரண்டும் வழி கேட்டைஅழித்து நல்வழியை காட்டினவர்களான நபீ(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் அவ்லியாஉகள், நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.!
ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் செல்லும் வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது.
ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின் முதலில் அஸ்தஃபிருல்லாஹல் அளீம் என்று மூன்று தரமும்.
Aug 25, 2013
சகாத் பற்றி ஓர் ஆய்வு
11:58 PM
தொடர் - 02...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி
அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
விபரம்
1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.
2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.
3. உடைமைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.
Jul 19, 2013
நோன்பின் இரகசியங்கள்.
3:42 PM
தொடர் – 03
அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழி) அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ’
விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
நோன்பு என்பது 3 படித்தரங்களை உடைய ஒன்றாகும்.
- பொதுவானவர்களின் நோன்பு
- விஷேடமானவர்களின் நோன்பு
- அதி விஷேடமானவர்களின் நோன்பு
பொதுவானவர்களின் நோன்பு என்பது வயிற்றையும், மர்மஸ்தானத்தையும் தடுத்திருத்தல். விஷேடமானவர்களின் நோன்பு என்பது கேள்வி, பார்வை, நாக்கு, கை, கால் ஏனைய உறுப்புக்களை பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்ளல்.
அதி விஷேடமானவர்களின் நோன்பு என்பது மோசமான எண்ணங்களை விட்டும், உலக சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை
Jul 10, 2013
நோன்பு
11:56 PM
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும்.
நோன்பின் பர்ழுகள்:
1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும்.
நிய்யத்:
'நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா - இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளானநோன்பை அதாவாக நாளைபிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத்செய்து கொள்ளவேண்டும்.
'நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா - இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளானநோன்பை அதாவாக நாளைபிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத்செய்து கொள்ளவேண்டும்.












