Jul 31, 2012

கத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு

அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் 3,4ம் நாட்கள்

இதில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்பாக எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பில் இணைந்த குர்ஆன் மத்ரஸாக்களில் அல்குர்ஆனைக் கற்றுமுடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், 1979 ஆண்டிலிருந்து எம்முடன் இணைந்திருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் விஷேட சிறப்புரையும் இடம்பெற்றது.
இவை தொடர்பான படங்கள் உள்ளே...

Jul 30, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி கொடியேற்ற நிகழ்வு

அஜ்மீர் அரசர் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும் அவர்களின் புதல்வர் ஹஸ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.07.2012 புதன் கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது அல்ஹம்துலில்லாஹ்... இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் பல்வேறு பிரமுகர்களும் பல்லாயிரம் முஹிப்பீன்களும் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்வுகள் தொடர்பான படங்கள் உள்ளே ....

Jul 1, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி

..கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் 26வது வருட உர்ஸே முபாறக் ஹாஜாஜீ மாகந்தூரியும் 12வது மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும்..
மேலதிக விபரம் உள்ளே **

Jun 18, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம்

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்கான அலுவலகம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை புனித புர்தஹ் ஷரீப் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் நிகழ்வுகளும் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2012 அன்று 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் நடைபெறும். 15.07.2012 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும்.

Jun 9, 2012

அற்புத வரலாறு

-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ-

முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூறினான்.

Jun 7, 2012

கல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு....

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது.

Jun 4, 2012

கவிதை....

அவ்லியாக்கள் என்றால் ........
-அபூ பஜ்ரி ஜலா-
வெற்றுக் கூட்டம்
ஒன்று
போடுது
பெரும் கோஷம்
அல்லாஹ்வின்
வலியென்றால்
யாரென்று
தெரியாமல்
அவர்களின்
அகமிய - நிலைதான்
புரியாமல்
* * * * * * *
அல்லாஹ்வை
அறிந்து
இறை நேசம் கொண்டு
பயம்
கவலை
அற்று
வாழும்
கலங்கரைவிளக்கங்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்