கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது.













