May 22, 2012

அல்-குர்ஆனின் நற்போதனைகள்

அபூ ஸுப்தீ
நல்லுபதேசம் செய்யுங்கள்
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55)


உண்மை பேசுங்கள்

அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119)

அழகானதைப் பேசுங்கள்
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83)

May 20, 2012

35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழு​​கையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

May 16, 2012

கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின்
64வது வருட மா கந்தூரி


காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.
3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை ஒதிமுடித்த 9 மாணவ மாணவிகக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

May 14, 2012

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஸலாத்துல்முஸாபிர்
(கஸ்ரு, ஜம்உ தொழுகை)
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர்.

'ளுஹர்- அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன.

May 6, 2012

ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click)
என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை
- ஏறும் கொடியும் ஈமான் பலமும் -

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?
கவித்திலகம்
இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ.....?
அதனாற்றான் –
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.

Apr 26, 2012

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஜும்ஆ
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ
ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும்.

ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன.

கொடியேற்ற நிகழ்வு

கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.

Apr 25, 2012

ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்....









வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..