ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும்
எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது கறாமத் என்னும் அற்புதம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் சமுத்திரம் இங்கு வந்து கூடுவதற்கு காரணமாக அமைகின்றது.













